shadow

தமிழகத்தில் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது
இதனை அடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்

இந்த நிலையில் தமிழகத்திற்கு 519 மெட்ரிக் டன்னாக ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டு 519 மெட்ரிக் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது