அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி முடிந்துவிட்டதாக விஜயகாந்த் அதிரடியாக அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சியின் தலைவர்களும் பல கட்டங்களாக கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது: இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது

இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply