திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி அளித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்

மேலும் அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு செய்துள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கிறது என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு செய்துள்ளது. மேலும் புரட்டாசி மாதத்தில் தமிழகத்திலிருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply