முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் வாகன விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் விஜயவாடா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார் அவருடைய காருக்கு முன்பும் பின்பும் தேசிய பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென சாலையின் குறுக்கே ஒரு பசுமாடு குறுக்கிட்டதால் தேசிய பாதுகாப்பு படையினர் தங்களது வாகனத்தை பிரேக் போட்டார்கள். இதையடுத்து பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது

இதில் நான்காவதாக வந்த சந்திரபாபு நாயுடு காரும் சிறிய அளவு விபத்துக்குள்ளானது இருப்பினும் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி செல்லும் போது வாகன விபத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply