அண்ணா சாலையில் போராட்டம் செய்த 1500 நர்ஸ்கள் கைது
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்க பேருந்துகளில் வந்த செவிலியர்கள் எஸ்ஐஇடி பேருந்து நிறுத்தத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திடீரென செவிலியர்கள் அண்ணாசாலையின் முக்கிய பகுதியில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஜெமினி பாலம் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. மேலும் காலை நேரம் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.