1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படும்: பள்ளிகல்வித்துறை
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது
#TET | #SchoolEducation
Leave a Reply
You must be logged in to post a comment.