ஆசிபாவை அடுத்து பஞ்சாபில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா என்ற சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தின் அதிர்ச்சியே மக்கள் மனதில் நீங்காத நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு பின்னர் துப்பட்டாவினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் மனேபூர் கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
இந்த நிலையில் சிறுமியின் உடலை போலீசார் தற்போது கண்டெடுத்துள்ளனர். 8-ம் வகுப்பு அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு பின்னர் துப்பட்டாவினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.