அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது சீனாவை விட அமெரிக்காவில் தான் மிக அதிக உயிர்ப்பலியை கொரோனா ஏற்படுத்தி வருகிறது

ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பலியாகி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1480 பேர் பலியாகி இருப்பது அந்நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருவது அந்நாட்டு மக்களையும் அதிபர் டிரம்ப் அவர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply