இன்று முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு: முதல்வர் உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ந் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் புதுச்சேரியில் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் என்பதால் இந்த ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடவும் முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply