கூவத்தூரில் 144 தடை உத்தரவு. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற ஓபிஎஸ் ஆதரவாளரான அமைச்சர் பாண்டியராஜன் கோவளம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை காரணமாக கூவத்தூரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார்.
கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூர் செல்வாரா? அல்லது தனது பயணத்தை ரத்து செய்வாரா? என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரியும்,.
Leave a Reply
You must be logged in to post a comment.