திருவாரூரில் கனமழை! பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா?

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான, கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் நேற்றிரவு சென்னை அண்ணா சாலை, மெரினா, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், தமிழகம், புதுச்சேரியில் நவ.30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Leave a Reply