14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 51 வயது அறிவியல் ஆசிரியை

சிகாகோவில் 51 வயது அறிவியல் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்த 14 வயது சிறுவனுடன் சுமார் ஒரு மாதம் பாலியல் உறவு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

டயானா சிட்ஸ்ட்டர் என்ற 51 வயது ஆசிரியை தன்னுடைய கார் மற்றும் பல்வேறு ஓட்டல்களில் 14 வயது மாணவனுடன் உறவு கொண்டிருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது சுமார் ஒரு மாத காலம் டயானா, மாணவனுடன் உறவு கொண்டது தெரிய வந்தது

இதனையடுத்து டயானாவை போலீசார் கைது செய்து குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவனுக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் கொடுத்து ஏமாற்றி உறவு கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் டயானாவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply