நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் 12 பந்துகளில் 8 சிக்சர்கள் அடித்த ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் 224 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 17ஆவது ஓவர் முடிவில்3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது

இதனையடுத்து 3 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது இந்த நிலையில் கார்ட்டில் வீசிய 18-வது ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ராகுல் திவேட்டியா அசத்தினார்

அடுத்ததாக இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது அதே போல் 19வது ஓவரில் 3 சிக்ஸர் அடிக்கப்பட்டதை அடுத்து கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் டாம் கர்ரன் ஒரு ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்

Leave a Reply