shadow

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தமிழகம் உள்பட இன்னும் ஒரு சில மாநிலங்களில் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இன்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தமிழ் ஆங்கிலம் உள்பட ஒரு சில பாடங்களுக்கு தேர்வுகள் தேவையில்லை என்றாலும் முக்கிய பாடங்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் தேவை என்றும் அதனால் ஒரு சில பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது