11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 11ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக இன்று மாலை செய்திகள் வெளிவந்தது.

ஆனால் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் மூன்று தேர்வுகள் மட்டுமே இருப்பதால் தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இன்றி அந்த மூன்று தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Leave a Reply