shadow

முதலமைச்சர் முன் அழுது கொண்டே கோரிக்கை வைத்த 11 வயது சிறுவன்! வைரல் வீடியோ

பீகார் முதலமைச்சர் முன் 11 வயது சிறுவன் அழுதுகொண்டே வைத்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது 11 வயது சிறுவன் திடீரென முதலமைச்சர் முன்பு அழுக ஆரம்பித்தார்

அவரிடம் உனக்கு என்ன பிரச்சனை என்று முதல்வர் கேட்டபோது தான் நன்றாக படிக்க வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது தனது கனவு என்றும், ஆனால் தனது தந்தை தான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் குடித்து விட்டு வருகிறார் என்றும் தன்னை படிக்க வைக்க மாட்டேன் என்கிறார் என்றும் கூறினார்

இதனை அடுத்து அந்த சிறுவன் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது