shadow

11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம். டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவு

dgpதமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று ஒரே நாளீல் 11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் பணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் விபரம் வருமாறு

1. கே.அருள் (ஆலங்குடி),
2. வி.கீதா (மணப்பாறை),
3. ஜி.ஐயப்பன் (திண்டுக்கல்),
4. கே.அசோகன் (ராமநாதபுரம்),
5. வி.ஜெயச்சந்திரன் (அரியலூர்),
6. டி.ரமேஷ்பாபு (தஞ்சாவூர்-வல்லம்),
7. டி.ஈஸ்வரன் (நாகர்கோயில்),
8. இ.விஜயகுமார் (திருவள்ளூர்),
9. ஜி.வனிதா (கிருஷ்ணகிரி),
10. எஸ்.முகமது அப்துல் முத்தாலிஃப் (தஞ்சாவூர்),
11. என்.மதிவாணன் (ராணிப்பேட்டை)

Leave a Reply