shadow

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம்: 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது ஒருசிலர் சிஎஸ்கே பனியன் அணிந்தவர்களை தாக்கியதாகவும் காவல்துறையினர்களை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது, மைதானத்தில் செருப்பு வீசியது, காவலரை தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\

ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர்களை தாக்கியதாக மதன்குமார் என்பவரை நேற்று திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply