கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை என தகவல் வெளிவந்துள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது

ஏற்கனவே 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், , ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்தி வைக்க வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply