shadow

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.

இதில் சுமார் 6.20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை.

இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறு தேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களையும் கண்டறிந்து மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.