கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவர்கள் என்பது ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். மேலும் இன்று சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானதால் தமிழகத்தில் மொத்தம் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.