தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பாசிட்டிவ்: ஊரடங்கு வேஸ்ட்டா?
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று மட்டும் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது
இதில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தும் தினமும் 100 பேர்களுக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் ஊடங்கு வேஸ்ட்டா? என்ற எண்ணம் ஒருசிலர் மனதில் எழுந்துள்ளது. ஆனால் ஊரடங்கு இல்லை என்றால் இன்னும் பலமடங்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கும் என்பதுதான் உண்மை.
Leave a Reply
You must be logged in to post a comment.