1000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த பெண்: ஜாமினில் வந்து மீண்டும் கருக்கலைப்பு

திருவண்ணாமலையில், 1,000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து, கைதாகி, ஜாமினில் வந்து, மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்ட, போலி பெண் டாக்டரை, போலீசார் மீண்டும் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவண்ணாமலை சேர்ந்த ஆனந்தி, என்ற 47 வயது பெண் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்து ஒருசில டாக்டர்களிடம் உதவியாளராக இருந்துள்ளார். அதன்பின்னர் டாக்டர்கள் கருக்கலைப்பு செய்தபோது அருகில் இருந்து உதவிய அனுபவத்தை வைத்து அவரே தனியாக கருக்கலைப்பு மையம் ஒன்றை ரகசியமாக வைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்த பெண் 1,000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆனந்தியை கைது செய்து அவரது வீட்டில் இருந்த ஸ்கேன் கருவிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்த ஆனந்திக்கு நிபந்தனை ஜாமீன் சில நாட்களுக்கு முன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பு செய்ததாக தகவல் வரவே தற்போது அவரை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply