ஒருவரை ட்ரோல் செய்து ஒரு லட்சம் டுவீட் போடலாம்: அண்ணாமலை
ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டும் பெரும்பாலான டுவிட்டுக்கள் பெய்டு டுவிட்டூக்களே என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜார்ஜியா உக்ரைன் சிலி போன்ற நாடுகளில் இதற்காகவே ஒரே ஐபி முகவரியில் உட்கார்ந்துகொண்டு பல ஐபி முகவரியை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேலான லட்சத்திற்கும் மேலான டுவிட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்
அவர்களுக்கு நாம் 100 டாலர் கொடுத்தால் போதும் ஒரே நாளில் ஒரு லட்சம் டுவிட்டுக்களை ஒருவரைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்து போட தயாராக உள்ளார்கள். இதனை தான் காவல்துறை அதிகாரியாக இருக்கும்போது கண்டுபிடித்தேன்.
எனவே இது மாதிரி பணம் வாங்கிக்கொண்டு இம்மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து விமர்சனம் செய்பவர்களை நாம் கண்டு கொள்ள தேவையில்லை என்று அண்ணாமலை சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.