10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்

10 மற்றும் 12வது படித்தவர்கள் இந்தியன் ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு மத்திய ரயில்வேத் துறையில் குரூப் சி மற்றும் குரூப் டி பகுதிகளுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தகுதியும் திறமையும் வாய்ந்தோர் வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply