10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சரின் இனிப்பான அறிவிப்பு

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது 2.30 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நேரம் போதுமானதாக இல்லையென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலை தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இனி பொதுத்தேர்வுகளை மூன்று மணிநேரம் எழுதுவார்கள்

Leave a Reply