10 வகுப்பு மாணவர்கள்: மறுக்கூட்டலுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

பள்ளியில் படித்த மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் மறுகூட்டல் கட்டணமாக பெறப்படும். இந்த கட்டணத்தை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்தி ஒப்புகை சீட்டை பெற்று கொள்ளலாம்

Leave a Reply