10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அதிர்ச்சியில் மாணவர்கள்
11,12-ம் வகுப்பை போல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய வகையில் கேள்வித்தாள் இருக்கும் என்றும் இந்த மாணவருகளுக்கு பாடத்தின் எந்த மூலையில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு மாணவருக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தடுத்து படிக்கும் படிப்பை தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்ய முடியும்
இந்த நிலையில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தின் எந்த மூலையில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுவது போல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய வகையில் கேள்வித்தாள் இருக்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.