10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படயினர்களால் கைது
நேற்று முன் தினம் ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டு விவகாரமே இன்னும் டென்ஷனில் உள்ள நிலையில் இன்று காலை நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
எல்லை தாண்டி பருத்தித்துறை கடல்பகுதியில் மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யபட்ட நாகை மீனவர்கள் 10 பேர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து நாகை மீனவர்களிடையே பதட்டம் நிலவியுள்ளது. உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.