10% இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

முன்னேறிய வகுப்பினர்களில் உள்ள ஏழைகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றபோது, ‘முன்னேறிய வகுப்பினருக்கு கொடுக்கப்படும் பொருளாதார ரீதியிலான 10% இடஒதுக்கீடு என்பது பலரது வறுமையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்ட முடிவாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் 50% மேல் இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்பது தவறான நம்பிக்கை என்றும், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு உள்ளது என்றும், 10% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது

Leave a Reply