shadow

10% இடஒதுக்கீடு குறித்த திமுக வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதா பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்த நிலையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடிபெற்றபோது ‘திமுக அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாவும், இந்த வழக்கை தொடர்ந்த ஆர்எஸ் பாரதி நேரடியாக பாதிக்கப்படவில்லை, என்பதால் அவரால் பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.

இந்த வாதத்திற்கு பின் இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Leave a Reply