கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாத இறுதியில் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியாகும் என்றும் ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்
பத்தாம் வகுப்பு தேர்வுகளும் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வகுப்புகளுக்கான நடத்தப்படாத ஒரு சில தேர்வுகளும் நடக்கும் தேதி குறித்த ஆலோசனையில் இருவரும் இருந்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து மிக விரைவில் பத்தாம் வகுப்பு தேர்வின் கால அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.