10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி அடைந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இன்றுமுதல் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
இன்று பள்ளிக்கு செல்லும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இன்றே அனைத்து பாடபுத்தகங்களும் வழங்கப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தூள்ளது.
பிளஸ் ஒன் வகுப்பில் முதல் குரூப்பான கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும், மூன்றாவது குரூப்பான வணிகவியல் பிரிவுக்கும் மாணவர்களின் சேர்க்கை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டியுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பை தவிர்த்து பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.