பரபரப்பு தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் நாடு முழுக்க பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இந்த வரைவு திட்டம் தயாரானதும் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்றும் அதனை பின்பற்றி மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவர்களிடம் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

Leave a Reply