-1ஐயும் -1ஐயும் கூட்டினால் 0 வரும். தப்புக்கணக்கு போட்ட கல்வி அமைச்சர்
உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் சமீபத்தில் டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு செய்தபோது அவரே மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். அப்போது அந்த வகுப்பின் ஆசிரியை ஒருவரிடம் -1ஐயும் -1ஐயும் கூட்டினால் என்ன வரும்? என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியை சரியான -2 வரும் என்று கூறினார்.
ஆனால் கல்வி அமைச்சர் அந்த பதில் தவறு என்றும், 0 தான் வரும் என்று கூறி கணக்கு ஆசிரியரை மிரட்டியுள்ளர்.
இதை அங்கிருந்த செய்தியாளர்கள் வீடியோ எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். தவறாக கணக்கு போட்டது மட்டுமின்றி ஆசிரியரையும் மிரட்டிய கல்வி அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.