ஹெல்மெட் இருந்தும் போடாத எம்பிஏ மாணவர்: விபத்தில் பரிதாப பலி
இருசக்கர வாகங்களில் செல்பவர்கள் ஒருசிலர் ஹெல்மெட் இருந்தும் அதனை அணியாமல் பைக்கின் முன்பக்கம் வைத்து கொண்டு செல்கின்றனர்.
ஹெல்மெட் அணிவது தங்களுடைய உயிரை பாதுகாக்க என்பதை புரியாமல் காவல்துறையினர்களுக்காகவே அணியும் பலர் இன்னும் உள்ளனர். அதனால்தான் காவல்துறையினர் இல்லாத பகுதிகளில் ஹெல்மெட்டை கழட்டிவிடுவதுண்டு
அந்த வகையில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அகமது சித்திக் என்ற மாணவர் நேற்று மதுரவாயில் அருகே நடந்த விபத்தில் பலியானார் இவர் சென்ற பைக் தடுமாறி கிழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
இவர் தினமும் பேருந்தில் செல்வதுதான் வழக்கம். ஆனால் நேற்று மட்டும் நண்பரிடம் கடன் வாங்கி பைக்கில் சென்றுள்ளார். பைக்கில் ஹெல்மெட் இருந்தும் அதனை அணியாமல் இருந்ததால் அவருக்கு மரணம் நேர்ந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.