shadow

ஸ்வீடன்: பரபரப்பான மார்க்கெட்டில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு, 4 பேர் பலி

மக்கள் கூடும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதை சமீபகாலமாக தீவிரவாதிகள் வழக்கப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் 32வது மாடியில் இருந்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்தை நோக்கி தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தியதால் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்

இந்த நிலையில் இன்று ஸ்வீடன் நாட்டில் பிசியாக இருந்த மார்க்கெட் ஒன்றின் மீது மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 4 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டின் ட்ரெல்லிபோர் என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தீவிரவாதி காரணம் இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply