ஸ்மிருதி இரானி யாருடைய முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் தெரியுமா?

உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வீழ்த்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று சுட்டு கொலை செய்யப்பட்ட சுரேந்திரஜித் சிங் என்பவருடைய குடும்பத்தின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கிராமம் ஒன்றின் தலைவரான இவரை சுட்டு கொலை செய்தவரையும், அவரை கொல்ல அனுப்பிய நபரையும் நீதியின் முன் நிறுத்துவோம் என்றும் ஸ்மிருதி இரானி சூளுரைத்தார்.

மேலும் சுரேந்திரஜித் சிங் மனைவியை சந்தித்த இரானி, அவருடைய குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Leave a Reply