ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பா? தமிழிசை சவுந்தரராஜன்
ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் தூத்துகுடியில் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய அரசுதான் வழிவகை செய்வதாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.