shadow

ஸ்டாலின் செஞ்ச விஷயம் அவங்க கட்சிக்காரர்களுக்கே தெரியாது: பொன் ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது திமுகா தலைவர் ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி உள்பட பல தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கப் போவது பற்றி அக்கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கே தெரியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்தியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Leave a Reply