ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை பதில்
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் சோதனையின் போது எடுக்கப்பட்ட தகவல்கள் ரகசியமானவை என்றும் அவை வெளியிடப்படுவதில்லை என்றும், விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை மதிப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
முன்னதாக வருமான வரித்துறை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.