shadow

இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது ‘நட்சத்திரப்பூ’ என்றும் அழைக்கப்படுகிறது.

பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

* இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும். இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் மற்றும் லிமோனின் உள்ளன.

* இப்பூவை பொடி செய்து ½ முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்.

* அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

* அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும்.

இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகும். இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் மன இறுக்கத்தை போக்கும்.

* துருக்கி, சீனா, பெர்சியா போன்ற நாடுகளில் மக்கள் செரிமானத்திற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மசாலா, வாயுவால் ஏற்படும் வயிற்று பிடிப்பை நீக்கும். இது பெருங்குடல் நோய் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது