வைகோ மீதான தேசதுரோக வழக்கு: ஒரு ஆண்டு சிறை என தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்று சென்னை ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் வைகோவுக்கு ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply