வேலூர் தேர்தலை ரத்து செய்க: கமல்ஹாசன்
வேலூரில் ஆர்.கே.நகரை மிஞ்சும் வகையில் பணப்பட்டுவாடா நடப்பதால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே ஒருசிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், ‘ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் சமீபத்தில் அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.