பெரும் பரபரப்பு
சென்னையிலிருந்து வேன் மூலம் தூத்துக்குடிச் சென்ற 14 பேரை காவல்துறையினர் மடக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்திற்கு சென்னையில் இருந்து வேன் மூலம் டிரைவர் உட்பட 14 பேர் சென்றனர். காவல்துறையினர்களை வழியில் பார்த்தால் வேனில் ஒளிந்து கொண்டு சென்ர இவர்கள் விளாத்திகுளத்தை நெருங்கிய நிலையில் போலீசாரிடம் பிடிபட்டனர்.
இதனையடுத்து வேனில் வந்த டிரைவர் உள்பட 14 பேருக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி வாகனத்தை இயக்கியதாக ஓட்டுநர் யுவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துகுடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.