வேட்பாளர் அறிவிப்பு வெளியிட்டவுடன் பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளுக்கு நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது சபாநாயகராக உள்ள வைத்திலிங்கம், புதுவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் வைத்திலிங்கம் கொடுத்ததாகவும், துணை சபாநாயகரும் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
புதுச்சேரியை பொருத்தவரையில் காங்கிரஸ் கோட்டை என்பதால் வெற்றி நிச்சயம் என்ற வகையில் வைத்திலிங்கம் தைரியமாக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.