வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடையாது: நீதிமன்றம் உத்தரவு
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேசர்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசை கொடுக்காமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுப்பதேன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை விதித்தது.
இந்த நீதிமன்ற உத்தரவால் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.