shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து செல்வதை அடுத்து தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் நேற்று நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் மோகன் ராஜா மற்றும் அவரது தந்தை எடிட்டர் மோகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிதியுதவி கொடுத்தனர். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் முதல்வரை சந்தித்து ரூபாய் 10 லட்சம் கொடுத்தார்

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சத்தை காசோலையை முதல்வர் இடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே அஜீத், ரஜினி மகள் செளந்தர்யா, ஏஆர் முருகதாஸ் உள்பட பலர் நிதியுதவி செய்துள்ளனர் என்பது தெரிந்ததே