வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்: திருமாவளவன்

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர்களின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் தான் நிரப்ப முடியும் என்பதால் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர் என்று கூறிய திருமாவளவன், எதிரி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில் திமுக சின்னத்தில் விசிக போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைக்கவே விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புவதால் திமுகவுக்கு திருமாவளவன் ஜால்ரா அடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply