வெயிட்டான பதவியை பிடித்த நடிகை ரோஜா: தொழிலதிபர்கள் குஷி

ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை. இருப்பினும் அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்தப் பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால் ரோஜா அதிர்ச்சியில் இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ரோஜாவை தனது வீட்டிற்கு வரவழைத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டுக் கழக தலைவர் பதவி கொடுக்க முடிவு செய்தார்

இதனை அடுத்து நடிகை ரோஜா ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டுக் கழகத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா ஆந்திராவில் தொழில் அதிகமாக் தொழில் தொடங்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும், ஆந்திராவில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வந்தால் அவர்களுக்கு தேவையான நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். நடிகை ரோஜாவின் இந்த அறிவிப்பால் தொழிலதிபர்கள் குஷியாகி உள்ளனர்

Leave a Reply